Friday, October 29, 2010

சிங்கை முருகன் பாடல்.

சிங்கையிலே கோவில்கொண்ட சிவன்மகனே முருகையா
பொங்கிவரும் காவிரிபோல் மங்காதபுகழ் சேர்த்தாய்!
எங்கையா உன்திருவை என்றுவந்து காண்பதென்று
தங்கமகன் தனைக்காண தவித்திருந்தேன் வெகுநாளாய்!

இங்கேவா என்றழைத்து எழிற்கோலம் காட்டிவிட்டாய்!
அங்கமெல்லாம் புல்லரிக்க அழகாஉனைப் பார்த்துவிட்டேன்!
சங்கெடுத்து ஊதுகையில் சதிராடிவரும் தமிழாய்
அங்கமெல்லாம் புல்லரிக்க அழகாஉனைப் பார்த்துவிட்டேன்!

மாப்போட்டு வெல்லமிட்டு மாவிளக்கும் ஏற்றிவைத்து
பூப்போட்டுப் பணிந்தவர்க்குப் புத்திரரும் மிகத்தருவாய்!
நாப்பாடும் பாட்டெல்லாம் நல்லதமிழ்ச் சொல்லெடுத்து
எப்போதும் பாடிவர எம்குலத்தைக் காத்தருள்வாய்!

பாலமிட்ட அன்பாலே பாடியுனைத் துதிக்கின்றோம்!
ஏலமிட்ட பாயசம்போல் இதயத்தை நனைக்கின்றாய்!
காலமெல்லாம் உனைத்துதித்து களிப்புமிகக் கொண்டோமையா!
நாளெல்லாம் திருநாளாய் நன்றாகத் தந்துவைத்தாய்!

காவடிகள் கொண்டுவந்துன் காலடியில் சேர்த்தவர்க்கு
சேவடிகள் காட்டிநின்றாய் செட்டிமக்கள் புகழ்சேர்த்தார்!
பாவடிகள் பாடிவந்தோம் பாசத்தைக் காட்டுமையா!
பூவடிகள் போற்றிநின்றோம் புண்ணியங்கள் தாருமையா!

இறையருளால் ஆக்கம் திருமதி முத்துசபாரத்தினம்.
                                                                             காரைக்குடி.

நான் இதுவரை சிங்கப்பூரோ மலேசியவோ பார்த்ததே இல்லை.முகப்புத்தகத்தில் பஜனை சாங்ஸ்ல் பார்த்ததும்
எழுதத்தோன்றியது. எல்லாம் இறையருளால்!
                                                                 நல்லது.

1 comment:

Chitra said...

எல்லா புகழும் இறைவனுக்கே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...