Sunday, September 19, 2021

திருசெந்தூர் செயந்திநாதா

 திருச்செந்தூர் செயந்திநாதா செந்திலவடிவேலா-நீறு

தரிச்சோமே இலையில்வாங்கி செந்தில்வடிவேலா!

சிரிச்சமுகம் காட்டியே செந்தில்வடிவேலா-மனம்

வரிச்சாயே சுந்தரமாய் செந்தில்வடிவேலா!

முன்னைசெய் தவமேநீ செந்தில்வடிவேலா-எமக்கு

அன்னையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

சிந்தைமகிழ் திருப்புகழே செந்தில்வடிவேலா-எங்கள்

தந்தையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

கண்ணைஇமை காப்பதுபோல் செந்தில்வடிவேலா-எங்கள்

அண்ணனாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

பக்கபலம் நீயேதான் செந்தில்வடிவேலா-எமக்கு

அக்காவாய் வரவேண்டும் செந்தில்வடிவேலா

அம்பியென அழைத்திடுவோம் செந்தில்வடிவேலா-எங்கள் 

தம்பியாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

பொங்குமன்பில் குளித்திடவே செந்தில்வடிவேலா-எங்கள் 

தங்கையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

மகள்போல ஓவியமாய் வந்திடுவாயே-அன்பு

மகத்தான காவியமே செந்தில்வடிவேலா!

மகனாக உனைக்கண்டோம் செந்தில்வடிவேலா-இந்த 

செகம்போற்றும் புகழோனே செந்தில்வடிவேலா!

பேரன்பால் உனைப்பாட செந்தில்வடிவேலா-எங்கள்

பேரனாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

காத்திருக்கோம் உனைக்காண செந்தில்வடிவேலா-எங்க

பேத்தியாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

கொள்ளுப்பேரன் கண்டோமே செந்தில்வடிவேலா-எங்கள்

உள்ளமெல்லாம் பரவசமே செந்தில் வடிவேலா!

கொள்ளைச்சிரிப் பழகாலே செந்தில்வடிவேலா-மனம்

கொள்ளைகொண்டார் பேரழகால் செந்தில்வடிவேரா

உற்றதொரு நண்பனாக செந்தில்வடிவேலா-உனைப்

பெற்றோமே நன்றியுடன் செந்தில்வடிவேலா!

கற்றவர்க்கு கவின் தமிழாய் செந்தில்வடிவேலா-நாங்கள்

வெற்றிபெற வாழ்த்திடுவாய் செந்தில்வடிவேலா!

திருந்தியவர் தெளிவாக செந்தில்வடிவேலா-நீ

மருந்தாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

கரும்பினிக்கும் குரலாலே உனைப்பாடவே-ஐயா

விரும்பி இங்கே வந்திடுவாய் செந்திலவடிவேலா!

சேவல்கொடி அழகோனே செந்தில்வடிவேலா-உனை

பாவில்பாடி அழைக்கின்றோம் செந்தில்வடிவேலா

ஆவலுடன் காத்திருக்கோம் விரைந்தோடியே-மயில்

தேவயானை வள்ளியுடன் வந்திடுவாயே!

கள்ளிருக்கும் பூவதனில் வண்டினைப்போல-எங்கள்

உள்ளமதில் குடிகொண்ட செந்தில்வடிவேலா!

புள்ளிமயில் ஏறிவரும் பூந்தமிழழகே-மக்கள்

புள்ளிபெருக அருள்தருவாய் செந்தில்வடிவேலா!

எந்தவினையும் வேலெடுத்து நலமாக்கியே-இங்கே

வந்தாரை  வாழவைக்கும் செந்தில்வடிவேலா!

சொந்தமென நாடிவந்தோம் உனைத்தேடியே-என்றும்

பந்தமாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!

முத்துசபா ரத்தினமாய் வேண்டிநின்றோமே-நாங்கள்

பக்திசெய்ய பலன்தருவாய் செந்தில்வடிவேலா!

சக்திமகன் சண்முகனே சங்கமித்திணைந்து-மக்கள்

ஒத்துமையாய் வாழவேண்டும் செந்தில்வடிவேலா!

1 comment:

Unknown said...

ஜெயந்தி நாதனுக்கு அரோகரா 🙏 அம்மாமண்டி அருமையான முருகன் பாடல்.இதை நானும் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.மிகவும் நன்றி.🙏

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...