ஆதீனமிளகி அய்யன் அடிபணிந்து ஏத்திவந்தால்
கோதிலாக் குலம்தழைக்கக் கொடுத்தருள் புரிவான்காணீர்
வில்வமர வனந்தனிலே வீற்றிருக்கும் அய்யனாரை
தெள்ளுதமி ழால்பாடித் தினந்தோறும் வணங்கிவந்தால்
வள்ளுவனும் வாசுகிபோல் வளமோடு வாழ்ந்திடலாம்
உள்ளமெல்லாம் மகிழ்வடைய உயர்பதவி பெற்றிடலாம்! [ஆதீனமிளகி]
துள்ளிவிளை யாடிவரும் துடிப்பான மழலை தந்து
புள்ளியெல்லாம் பெருகிவரப் புகழ்மிகவே தந்திடுவார்
அள்ள அள்ளக் குறையாத அன்னமென்றும் விளைந்திருக்கும்
இல்லமெல்லாம் நிறைந்திருக்கும் இனியபொருள் நிலைத்திருக்கும்![ஆதீன]
நாடிவரும் நகரத்தார் நன்மையெல்லாம் பெற்றுயர
தேடிவரும்செல்வமெல்லாம் செழித்தோங்கச் செய்திடுவார்!
கோதிலாக் குலம்தழைக்கக் கொடுத்தருள் புரிவான்காணீர்
வில்வமர வனந்தனிலே வீற்றிருக்கும் அய்யனாரை
தெள்ளுதமி ழால்பாடித் தினந்தோறும் வணங்கிவந்தால்
வள்ளுவனும் வாசுகிபோல் வளமோடு வாழ்ந்திடலாம்
உள்ளமெல்லாம் மகிழ்வடைய உயர்பதவி பெற்றிடலாம்! [ஆதீனமிளகி]
துள்ளிவிளை யாடிவரும் துடிப்பான மழலை தந்து
புள்ளியெல்லாம் பெருகிவரப் புகழ்மிகவே தந்திடுவார்
அள்ள அள்ளக் குறையாத அன்னமென்றும் விளைந்திருக்கும்
இல்லமெல்லாம் நிறைந்திருக்கும் இனியபொருள் நிலைத்திருக்கும்![ஆதீன]
நாடிவரும் நகரத்தார் நன்மையெல்லாம் பெற்றுயர
தேடிவரும்செல்வமெல்லாம் செழித்தோங்கச் செய்திடுவார்!
கூடிவந்து மக்களெல்லாம் கொண்டாடி வணங்கிவந்தால்
கோடிபெறும் நன்மையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தருள்வார்!-[ஆதீனமிளகி]
கோடிபெறும் நன்மையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தருள்வார்!-[ஆதீனமிளகி]
4 comments:
அருமை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
எங்க குலதெய்வமும் ஐயனார் அப்பன்தான்
பகிர்வுக்கு நன்றி
ஆச்சி,
கவிதை கண் கலங்க வைத்தது!
நன்றி,
தேன் பாரி
ஆச்சி,
கவிதை கண் கலங்க வைத்தது.
நன்றி,
தேன் பாரி
Post a Comment