Wednesday, May 30, 2018

இல்லாத ஆச்சியப்பத்தி
இழிவாகப் பேசிப்புட்டு
நல்லவங்க மனச எல்லாம்
நாரு நாராக் கிழிச்சுப்போட்டு
செல்லாத காசான
செல்லூரு ராசப்பனே?

மெல்ல மெல்லத்
தெய்வமெல்லாம்
மெதுவாகச் சொல்லுமையா
நல்லபுத்தி உனக்குவர,
நகரத்தார்
பெருமை எல்லாம்!

சிகரத்தார் நாங்கள்
பெருமையுற வேநடப்போம்
பகரும் மொழி சிலசமயம்
பலித்துவிடும் என்பதனால்!

பலித்துவிடும் என்பதனால்
நாங்கள் நல்லதையே
சொல்வோம் என பொருள்படும்.

[இல்லாத ஆச்சி]
மனோரமா இப்போது இல்லை
அவர் ஆச்சியும் இல்லை!?

Related Posts Plugin for WordPress, Blogger...