Friday, October 22, 2010

ஒற்றுமையே உயர்வினைத்தரும்

ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்துகொள்ளுதலே முதலில் முக்கியம்.
பிறகு மற்றவர் நம் எண்ணங்களுக்கு ஒத்துவருவார்களா என்பதை முயற்சி
செய்து பார்க்கவேண்டும். முடியவில்லை என்றால் நம்மால் அவர்களுடன் ஒத்துப்போகமுடியுமா என்று பார்க்க வேண்டும்.அப்போது நம்மால் சிலசெயல்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாதபோது நம்எண்ணங்கள்மூலம்
மனதில் நல்லவற்றையே எண்ணி அவர்கள் நல்லவராக வேண்டும் என்று மனதில் திரும்பத்திரும்ப எண்ணிவந்தால் எல்லோருமே ஒற்றுமையாக
வாழ்ந்து உயர்வடையலாம்.நம் எண்ணங்களில் உறுதியாக இருந்தால் எந்தசெயலிலும் வெற்றியடையலாம்.அறிவியல் ஆய்வாளர்களும்கூட
உறுதிப்படுத்திக் கூறியுள்ளனர்.

இதுதான் மனிதருக்கும் மற்றவைக்கும் மாற்றமுள்ளவேறுபாடு.!
இதுதான் சான்றோர் சாற்றிய சத்தியம்!
உண்ர்ந்தோர் உரைத்த உண்மைகள்!
நாமும் உணர்ந்தால் நமக்கு நன்மைகள்!

நல்லதே நினைப்போம்
நல்லதே சொல்லுவோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...