Tuesday, January 25, 2011

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ என்கண்ணே
ஆரிரரோ ஆராரோ
மானோடும் வீதியெல்லம்
தம்பி தானோடி வந்தானோ
ஓடுமா மேகம் கண்ணே
ஒளிவிடுமா ராணிமேகம்
கண்ணோ என்கவரிமான்
பெற்ற பெண்ணோ
கண்ணான மீனாளாம்
எம் மதுரை மண்ணாளாம்
மதுரை மண்ணாள வாராகன்னு
என்கண்ணே
பொன்னால தாமரையும்
பூக்கும்அந்தப் பொய்கையில
பொய்கையாம் வைகை என்கண்ணே
வைகையாத்துத் தண்ணிவர
பாலாத்துத் தண்ணிவர என்கண்ணே
பாக்கவந்த பாலகனே
பாலகனை ஆரடிச்சா
ஆரடிச்சா ஏனழுதா யென்கண்ணே
அடிச்சாரச் சொல்லியழு
தாத்தா அடிச்சாரோ என்கண்ணே
தமரைப்பூச் செண்டாலே!
பாட்டி அடிச்சாரோ என்கண்ணே
பஞ்சுப் பூச்செண்டாலே!
மாமன் அடிச்சாரோ என்கண்ணே
மகிழம்பூச் செண்டாலே!
அத்தை அடிச்சாரோ என்கண்ணே
அல்லிப்பூச் செண்டாலே
அடிச்சாரச் சொல்லியழு என்கண்ணே
ஆவதென்ன பாத்துருவோம்!
தொட்டாரச் சொல்லியழு என்கண்ணே
தோள்விலங்கு போட்டுருவோம்
ஆரும் அடிக்கலையே என்கண்ணே
ஐவிரலும் தீண்டலையே!
தம்பி தானாயழுகிறானே
தாயாரைத் தேடுகிறான்!

பரட்டைப் புளியமரம் என்கண்ணே
பந்தடிக்க ஒருநந்தவனம்
நந்தவனம் கண்திறந்து என்கண்ணே
நாலுவகைப் பூஎடுத்து
பூஎடுத்துப் பூசைசெய்யும்
புண்ணியனார் பெயரனோ என்கண்ணே
மலரெடுத்துப் பூசைசெய்யும்
மகராசர் பெயரனோ
கண்ணே என்கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ என்கண்ணே
ஆரிரரோ ஆராரோ




















3 comments:

Chitra said...

அம்மா, மென்மையான தாயன்பு மிளிரும் இந்த தாலாட்டில், நான் என்னை மறக்கின்றேன்.

Chitra said...

அம்மா, மென்மையான தாயன்பு மிளிரும் இந்த தாலாட்டில், நான் என்னை மறக்கின்றேன்.

Jaleela Kamal said...

mika arumaiyaana thalaaddu

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...