Tuesday, May 6, 2014

மத்தாப்பூச் சிரிப்பழகா!

மத்தாப்பூச் சிரிப்பழகா மயில்மேலே வருமழகா!
கொத்தாய்ப்பூ பூத்ததுபோல் கொஞ்சுதமிழ் பேரழகா!
சித்தத்தில் உனைவைத்து சீரடிகள் நினைந்துருகி
நித்தநித்தம் உனைவேண்ட நீவருவாய் திருமுருகா! ----------[மத்தாப்பூ]

சேவல்உன் கொடியிருக்க சிங்காரமாய் கையணைத்து
மேகாரம் மீதமர்ந்து மிடுக்குடனே காட்சிதந்தாய்!
தேவானை வள்ளியுடன் தேரினிலே வந்திடுவாய்
நோவாமல் கண்களினால் நோக்கிடநோய் போக்கிடுவாய்! -[மத்தாப்பூ]

சந்தத்தில் தமிழெடுத்து தானானாப் பாடிவர
சொந்தத்தில் உறவெடுத்து தோழனைப்போல் நீவருவாய்!
கந்தனுந்தன் பேர்சொன்னால் கவலையெல்லாம் துரத்திடுவாய்!
வெந்தமனம் வென்றுவர வேலெடுத்து வந்திடுவாய்! ----------[மத்தாப்பூ]

காலயிலே உனைப்பாத்தா கவிதையெலாம் ஊத்தெடுக்கும்!
மதியத்தில் பாத்துவந்தா மனசெல்லாம்! பூத்திருக்கும்!
மாலையில கண்டவங்க மகிழ்வுடனே வாழவைப்பாய்!
இரவுவந்து வணங்கிநின்றால் வரம்தந்து வாழ்த்திடுவாய்! --[மத்தாப்பூ]


Related Posts Plugin for WordPress, Blogger...