Wednesday, October 28, 2015

சரஸ்வதியின் இன்னும் சில பெயர்கள்.

சாரதா தேவி,
ஹம்சவாஹினி,
ஜகநீ,
வாணீஸ்வரி,
கவுமாரி,
ப்ரம்மசாரிணி,
புத்திதாத்ரி,
வரதாயினி,
க் ஷக்ரஹண்டி,
மற்றும்
புவனேஸ்வரி.

  நன்றி.தினமலர்.

Saturday, October 3, 2015

கன்னி கனியானாள்!

எங்கள் அண்ணன்மகள் வயசுக்கு வந்தபோது அண்ணனுக்கு எழுதிய கவிதை மடல்! இதை எழுதியதற்காக அண்ணன் ஆயிரத்தொரு பொற்காசு பணமுடிப்பு தந்தார்கள்.


கன்னித் தமிழினிமை காட்டுகின்ற மலர்முகத்தில்
பண்ணினிசை கூட்டுகின்ற பவளச்செவ் வாயிதழாள்!
எண்ணக் குவியலிடை எழில்கொஞ்சும் நன்முத்தாள்!
மின்னலிடை அன்னநடை மிளிர்கின்ற போதினிலே
கன்னி கனியானாள்! கண்டோர்க்கு வியப்பானாள்!
கண்ணின் கருமணியெனக் காத்திடுவீர் அவள்தனையே
தன்அவனைத் தேடுதற்கே தாமரையாள் மலர்வதுபோல
மன்னவனைத் தேடித்தரும் மாபொறுப்பும் தந்துவிட்டாள்!

Related Posts Plugin for WordPress, Blogger...