Monday, August 17, 2015

சின்னச் சின்ன ரோஜா!

எனது முதல் கவிதை.பள்ளியில் படிக்கும்போது எழுதியது.

சின்னச் சின்ன ரோஜா!
  சிவப்பு வண்ண ரோஜா!-இதழ்
கண்ணைக் காட்டி என்னை
  கனிந் தழைக்கும் ரோஜா!
மென்மை கொண்ட ரோஜா
  மினுக்கு கின்ற ரோஜா!-இளம்
பெண்மக்[கு] உவமை ரோஜா!
  பேசத் துடிக்கும் ரோஜா!
முத்துப்போன்ற ரோஜா!-பனி
  மொட்டுத் தோய்ந்த ரோஜா!
பட்டு உடுத்திய ரோஜா!-நான்
  தொட்டு வைத்த ரோஜா!

Friday, August 7, 2015

என்ன நாஞ்சொல்லுரது?! 4

சும்மா சும்மா போரப்போட்டு
கம்மாயெல்லாங் காஞ்சுபோச்சு!
எம்மாம்பெரிய போரப்போட்டு
ஏரியெல்லாம் வத்திப்போச்சு!
கெணத்துக்குள்ள வாளிபோனா
மணல் மணலா வருதுங்க!
மழைநீரு சேமிப்ப 
மறக்காமப் போட்டிங்கன்னா
வளமான வாழ்க்கைக்கு
வழிகாட்டி ஆவீங்க!
வளமான இந்தியாவ
வருங்காலமாக்கலாங்க!
என்ன நாஞ்சொல்லுரது
எல்லாருக்கும் நல்லாருக்கா?
Related Posts Plugin for WordPress, Blogger...