Wednesday, September 2, 2015

எனது முதல் சாமிபாட்டு.

தொந்திக் கணபதி உன் தூய திருவடியை
நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக!

கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்!
கொலமதி போல்முகனே ஆறுமுகமானாய்!

ஞாலமதில் நீயெனக்கு நல்லருளைத் தாதா!
பாலகனே உன்னடிகள் பணிந்தேன்நீ வாவா!

வெள்ளிவேலை அள்ளிவந்து வெண்ணீறு தருவாய்!
புள்ளிமயில் ஏறிவந்து பூந்தமிழாய் வருவாய்!

பிள்ளையென என்னையெண்ணி பேசுமொழிஅருள்வாய்!
நல்லவனே வல்லவனே உள்ளமுதே உயிராய்!


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...