Tuesday, January 17, 2012

என்ன நாஞ்சொல்லுரது? 2

மோல்மேனு குறிச்சியெல்லாம்
ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு
ஆல்வீ டு ரெண்டாங்கட்டு
கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு!
கூட்டிமொழுக ஆளுக்கெல்லாம்
ரேட்டுரொம்ப ஏறிப்போச்சுனு
போட்டிபோட்டு கூட்டுனவீ ட
கூட்டாமெ விட்டதால
கூட்டிமொழுகி வச்சவளவு
கொஞ்சங்கொஞ்சமா தூசியடஞ்சு
ராட்டிதட்டும் எடம்போல
ரணகளமா ஆயிப்போச்சு.
கோட்டைபோல வீ ட்டக்கட்டி
கொலாகலமா வாழ்ந்தவங்க
நோட்டமிட்டா மனசெல்லாம்
நொந்துபோயி நூலாவாங்க.
பாட்டன் பூட்டன் கட்டிவச்ச
பெரியவீட்ட பழுதுநீக்கி
ஓட்டமாத்தி ஒழுகல்நிறுத்தி
கரையானுக்கு மருந்தடிச்சு
தூணுசொவரு எல்லாத்துக்கும்
தூள்பறக்க வண்ணந்தீட்டி
வெடிப்புக்கெல்லாம் வெள்ளயடிச்சு
வெள்ளச்சொவர நல்லாக்கி
பர்மாத்தேக்கு நெலைக்கெல்லாம்
பக்குவமா எண்ணையடிச்சு
மோப்புக்குள்ள நுழைகையில [முகப்பு]
மொகமெல்லாம் மலரவைங்க!
சீட்டுக்கட்டுப் போலவீடு
சீக்கிரமா கட்டிரலாம்.
பாட்டன்வீடு போலநமக்கு
பக்குவமாக் கட்டவருமா!?

என்னநாஞ் சொல்லுரது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

Sunday, January 15, 2012

அக்கினி ஆத்தாள் பாட்டு

தேர்போல குடும்பங்கள் சேர்த்துமே வைத்துநீ
              செகம்போற்ற வாழவைப்பாய்!
ஊர்போற்றி மெச்சவே ஒற்றுமை ஆக்கிநீ
             உள்ளங்கள் நெகிழவைப்பாய்!
மனதிலே நினைப்பவர் மாபெரும் சக்திபெற
            மாயங்கள் செய்திடுவாய்!
தனதென நினையாமல் தருகின்ற நல்லவரை
          தழைத்தோங்கச் செய்திடுவாய்!
உன்னரும் கருணையால் உள்ளம் நனைந்துமே
           உருகியே நிற்கிறோமே
என்னரும் தாயேநீ எழிற்கோலம் காட்டியே
        எங்களை ஆட்கொள்ளுவாய்!
இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
           இன்னருள் புரிந்திடுவாய்!
கன்றுபோல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
            அக்கினி ஆத்தாஉமையே!

     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
Related Posts Plugin for WordPress, Blogger...