Tuesday, March 22, 2011

பிடிமண் எடுத்தல்.

கருத்த மீசை
கையில் வீச்சரிவாள்

சிரித்த முகத்தில்
சீறும் விழிகள்!

குட்டிவெட்டிப் பூசைபோட்டு
குலசாமி கும்பிட்டு

வீறுகொண்ட வேங்கைபோல்
வீச்சரிவள் மின்னலிட

கால்சலங்கை கலகலக்க
வேல்போட்டு ஆடிவர

குடையும் கொடியும் ராச
நடைபோட்டு அழைத்துவர















குலவையிடும் கிராமத்தார்
அலையலையாய் அடுத்துவர

கொட்டும் அதிர்வேட்டும்
 கூடி முழக்கிவர

புரவி எடுப்புக்கு
பிடிமண்ணு எடுத்துவர

சாப்பாடு கோயிலிலே
சகலருக்கும் அன்னமிட்டு

காளாஞ்சி கொடுத்து
களிப்பில் மிதக்கவிட்டு

பாக்கவந்த பேருக்கெல்லாம்
பாக்கும் வெத்திலையும்

புலவர் பாட்டிசைக்க
புவியெல்லாம் ஆனந்தம்

வேளார்க்கு மரியாதை
வளமாகச் செய்து
வீட்டில் அழைத்துவிடல்.

         புரவிஎடுப்புக்குப் புரவிசெய்ய மண் எடுப்பது
ஊர்கூடிப் பெரிய விழாவாக நடத்தப்பெறுகிறது.
இது எங்கள் குலதெய்வம் ஆதீனமிளகி ஐயனார்
கோவிலில் நான்கண்ட முதல் பிடிமண்எடுக்கும்
விழா.பிடிமண் எடுக்கும் இடத்திற்கு பெண்கள்
செல்லக்கூடாது என்றுசொன்னதால் நான்போய்
பார்க்கவில்லை.இரவு எட்டுமணிமுதல் பதினொரு
மணிவரை இந்தவிழா நடந்தது.

Thursday, March 17, 2011

மனசு மறந்துருச்சா?

வணக்கம்
எங்கபோயிருந்தாப்பில இவ்வளவுநாளா?
வெளிநாடா?
அதுஒண்ணும் ரொம்ப
தூரமில்லையே கணினிக்கு?
மறந்து போச்சா?இல்ல
அவ்வளவுதான்னு இருந்துட்டாப்லயா?
 மனசு மறந்துருச்சா?
கணத்துல கவனம்வந்துச்சா?
கொஞ்சங்கொஞ்சமா அப்பாசெய்யிற
பஞ்சாயத்துல மறந்துபோச்சா?
கற்றதெல்லாம் மறக்காம
முற்றோதல்ல மனம் லயிச்சிருச்சா?
தூசிபடிஞ்சு போச்சே?
காசுமிச்சம் பார்த்தா?[கரண்டுக்கு]
பணத்துல ஷேருவாங்கி
பாதியா வெலையிறங்கிப்போச்சா?
வேலைக்கு ஆள்வராம
வேலப்பளு ரொம்பவா?
என்னதான் ஆனாலும்
எழுந்து வந்திருவிங்களே?!
என்னாச்சு சொல்லுங்க
என்னவேணா செஞ்சிருவோம்.
தானா மனசுக்குள்ள
தானெழுந்த கேள்விகளுக்கு
நானெழுந்துவந்துவிட்டேன்
நலமுடனே எழுதுதற்கு!!!

Related Posts Plugin for WordPress, Blogger...