Saturday, April 23, 2011

எங்கள் ஊர் காரைக்குடி.

காரைக்குடி
மிகநல்ல ஊர்.
வாழ்வின் தேவைகள்
அனைத்தும்
ஒரே இடத்தில்!
கல்லுக்கட்டியைச் சுற்றி!
கொப்புடைய அம்மனை
ஒரு பெரிய
பிரகாரம்வந்தால் போதும்!

ரொம்பதூரத்திலிருந்து
வருபவர்களுக்கு
உபயோகமான
செய்திகள்சில.

உங்கள் வயிற்றுக்கு
தொந்தரவில்லாத
பலகாரம் சாப்பாட்டுக்கு
ஆலங்குடியார் வீதியில்
ஒருஆச்சிவீடு,
காலை பலகாரம் மட்டுமென்றால்
அரு.அ.வீதியில்
காந்தி நெய்ஸ்டோர் அருகில்
மல்லிகை உணவகம்.

உங்கள்வீட்டு விருந்துகளுக்கு
முன்கூட்டியே சொல்லி
செட்டிநாட்டு உணவுவகைகள்
ஏற்பாடு செய்துகொள்ள
செந்தில் மெஸ்
கீழ்வரும் எண்ணில்
கூப்பிட்டு விவரம் அறியலாம்
9444816708.

தங்கும் இடத்துக்கு
செக்காலை ரோட்டில்
உதயம் லாட்ஜ்.

பெரியார்சிலை அருகில்
வசதியான தங்கும் இடத்துக்கு
கோல்டன் சிங்கார்.

அதன் அருகில்
அன்னலெட்சுமி உணவகம்
விலையைப்பற்றி யோசிக்கக்கூடாது.
தரமானதும்,அலையாமல்
உங்களுக்கு
மிக அருகிலும்உள்ளது!

சுதந்திரப் போராட்ட வீரர்
கம்பன் அடிப்பொடி
சா.கணேசன் அவர்கள் பிறந்தஊர்
காரைக்குடி!

தமிழ்த்தாய்க்கு
கொயில்கட்டியஊர் 
காரைக்குடி!

கண்ணதாசன் பிறந்தது
சிறுகூடல்பட்டி என்றாலும்
பிள்ளை வளரவந்த ஊர்
காரைக்குடி!

வள்ளல்அழகப்பரின் பிறந்தஊர்
கோட்டையூர் என்றாலும்
அவர்வாழ்வின் மிகஉயர்ந்த
நிலையை அடையக்காரணமான
அழகப்பா கல்விநிறுவனங்கள்
அமைத்த ஊர்
காரைக்குடி!

திரப்படத்துறையில் மிகப்புகழ்பெற்ற
ஏ.வி.எம் மெய்யப்பசெட்டியார்

இயெக்குனர்கள்
எஸ்பி.முத்துராமன்
பஞ்சு அருணாசலம்
இராம.நாராயணன்
காரைக்குடி நாராயணன்
பிறந்த ஊர்
காரைக்குடி!

குடிநீர்க்காவலர் பழ.கருப்பையா
மெட்டிஒலி திருமுருகன்
போன்றவர்களின் சொந்தஊர்
காரைக்குடி!

ஆயிரம்ஜன்னல் வீடுமுதல்
அரண்மனைபோன்ற வீடுகள்
அமந்த ஊர்
காரைக்குடி!

செட்டிநாட்டுக்குப் பெருமைசேர்க்கும்
நூல் சேலைகளுக்கு
புகழ்பெற்ற ஆர்.எம்.ஆர்
சேலைக்கடை மெ.மெ. வீதியில்
அமைந்த ஊர்
காரைக்குடி!

நகரத்தார் குருபீடம்
கோவிலூரில் அமைந்த ஊர்
காரைக்குடி!

குன்றக்குடி பிள்ளையார்பட்டிக்கு
மிக அருகில்[சுமார் பத்து கி.மி]உள்ள ஊர்
காரைக்குடி!

ஆலமர் கடவுள்
மால[அ]யன் கோவில் முன்னே
அமர்ந்து அருள்பாலிக்கும் ஊர்
காரைக்குடி!

நூற்றிநாற்பது ஆண்டுகள்
பழமைவாய்ந்த நகரச்சிவன்கோவில்
அமைந்த ஊர்
காரைக்குடி!

நகரச் சிவன்கோவில் அருகில்
நூற்றி எட்டுப்பிள்ளையார்
அமர்ந்து அருள்பாலிக்கும் ஊர்
காரைக்குடி!

எடுக்க எடுக்கக் குறையாத
குடிநீர்ச் செம்பை ஊற்றுஉள்ள ஊர்
காரைக்குடி!

முத்துமாரி அம்மனுக்கு
தாவிவரும் வேல்போட்டு
காவடியும் பால்குடமும்
முளைப்பாரி மதுக்குடமும்
தீச்சட்டி பூமிதியும்
காணக்கிடைக்காத காட்சியில்
பங்குனியில் பொங்கிவழியும் ஊர்
காரைக்குடி!

ஏ.வி.எம்மிற்குப்பிறகு
இப்போது புதிதாக
திரப்படத் துறையினர்
முற்றுகையிடும் ஊர்
காரைக்குடி!

Tuesday, April 5, 2011

என்ன வேண்டும்? எழுந்துவா...

என்னவேண்டும்?
எழுந்துவா..

மற்றவர் மனம்
பாதிக் காத

மாற்றம் உள்ளதில்
மனதைச் செலுத்து

ஏற்றம் உள்ளதாய்
எடுத்து யோசி

கொஞ்சம் கொஞ்சமாய்
முயன்று யோசி

நெஞ்சில் உறுதியாய்
நின்று யாசி

நினைவின் வழியில்
நீயும் உழைத்தால்

அனத்தும் நன்றாய்
நினைத்தது நடக்கும்!

வானும் மண்ணும்
வளமாய் வசப்படும்!!

என்ன வேண்டும்?
எழுந்துவா
எல்லாம் கிடைக்கும்!

Sunday, April 3, 2011

ஐயனார் கோவில் புரவி.

பார்த்துப் பிடிமண் எடுத்து
பக்குவமாய்க் குழைத்துவைத்து

சேர்ந்து குடும்பமெல்லாம்
செய்யஒரு இடம் அமைத்து

சேமக் குதிரையுடன்
செய்யும் பெரும்பூதம்

வார்ப்புருவம் இல்லாமல்
வடிவாகச் செய்ய

கடும் விரதம்
மனத்தூய்மை!

கற்பனையும் கற்றவையும்
கைவினையில் உருவாகி

சொற்பதங் கடந்திங்கே
அற்புதமாய் எழுந்ததுவோ!!



Related Posts Plugin for WordPress, Blogger...