Sunday, April 3, 2011

ஐயனார் கோவில் புரவி.

பார்த்துப் பிடிமண் எடுத்து
பக்குவமாய்க் குழைத்துவைத்து

சேர்ந்து குடும்பமெல்லாம்
செய்யஒரு இடம் அமைத்து

சேமக் குதிரையுடன்
செய்யும் பெரும்பூதம்

வார்ப்புருவம் இல்லாமல்
வடிவாகச் செய்ய

கடும் விரதம்
மனத்தூய்மை!

கற்பனையும் கற்றவையும்
கைவினையில் உருவாகி

சொற்பதங் கடந்திங்கே
அற்புதமாய் எழுந்ததுவோ!!



1 comment:

Chitra said...

கற்பனையும் கற்றவையும்
கைவினையில் உருவாகி

சொற்பதங் கடந்திங்கே
அற்புதமாய் எழுந்ததுவோ!!


.....ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க, அம்மா....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...