Sunday, September 6, 2015

மாலைப் பொழுதழகு.

1963ம் ஆண்டு காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது எழுதியது.ஆண்டுமலரில் வெளிவந்தது.அச்சில் ஏறிய முதல் கவிதை!

திடலாய்க் காணும் கடலே உடலாய்!
பிடிபடா மின்னல் துடியிடை யாக!
நீல விசும்பே கோல உடையாய்!
ஆழக் கடலலை அழகுக் குழலாய்!
குளிரும் வெண்மதி குலவிடும் முகமாய்!
ஒளிரும் விண்மீன் எழிலின் மலராய்!
பெற்றவள் வந்தாள் பேரழகுடனே!
நற்றவ மாலைப் பொழுதே வாழி! 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...