Sunday, January 2, 2011

வயதானால் இப்படித்தான்!

எழுதிக் குவித்திடத் தோன்றும்
எண்ணற்ற கற்பனைகள்.
புழுதிதட்டிக் கொண்டுவந்து
புதுயுகப் புத்தகத்தில்
புன்னகையாய் மலரவேண்டும்!
எண்ணங்கள் மிகநிறைய்ய்ய!
எழுதத்தான் நேரமில்லை.
காலை எழுந்ததும்
கைபார்த்துக் கடவுள்வணங்கி
பல்துலக்கிக் காலைக்கடன்முடித்து
உடற்பயிற்சி, யோகாபண்ணி
[அதைசெய்தபின்தான்கொஞ்சம் சுறுசுறுப்பே வருகிறது]
வயதாகிவிட்டதல்லவா?
பின் குளித்து, விளக்கேற்றி
சாமி கும்பிட்டு
காலை உணவு தயாரித்தல்.
உண்டுமுடித்ததும்,
மாத்திரைமருந்து, [இல்லைன்னாஒண்ணும் நடக்காது]
பதினோரு மணிக்கு
மெட்டிஒலி, பின் கஸ்தூரி
பின் சமையல்.
இருவரும் சேர்ந்துதான்
ஆளுக்கு ஒன்றாய்ச் செய்வது.
தலைவர் இளவயதில்
செய்யாத உதவியெல்லாம்
இப்போது செய்கிறார்கள்
விலைக்கு வாங்கிச்சாப்பிட்டால்
வயிறு ஏற்பதில்லை.
அல்லது வீட்டின்தலைவருக்குப்
பிடிப்பது இல்லை.
சமையலுக்கு ஆள்போட்டால்
ஒழுங்காய் வருவதில்லை.
இதில இடையிடையே
தலைவரைத் தேடிவரும்
பஞ்சாயத்துக்கள்,
சாமிவீட்டு வேலைகள்,
கோவில் வேலைகள்,
கல்யாணம் பேசிமுடித்தல்,
ஊர்வேலைகள் சம்பந்தமாக
வருகிறவர்களுக்கு உபசரிப்பு
கணினியப் போட்டு விட்டு
போகவர நாலுவரி
காப்பிபோட்டுக் குடுத்துவிட்டு
வரப்போகநாலுவரி
வேலக்கார அம்மாவந்தா
வெளக்கற பாத்திரம் எடுத்துத்தரணும்
வண்ணாத்தி வந்தாக்க
துணி சோப்பு எடுத்து குடுக்கணும்.
இம்புட்டுக்கும் இடையில
ஷேர்மர்க்கட் வியாபாரம்[அப்பச்சி கற்றுக்கொடுத்தது]
கூப்பிடுகிற இடங்களுக்கு
திருவாசக முற்றோதல்,
முடிந்தபோதெல்லாம் புத்தகவாசிப்பு,
மாலையில் விளக்கேற்றி
மங்கலமாய் நாலுபாட்டு!
சிவன்கோவில் சென்றுவந்து,
சிறிது உணவு சாப்பிட்டு,
நாதஸ்வரம் திருமதிசெல்வம்,
பின் வழைப்பழம் பால்
மாத்திரை மருந்துகள்,
இதன்பிறகு தூக்கம்வராவிட்டால்
கணினியில் கொஞ்சநேரம்,
தலைவருக்கு கோபம்வருவதற்குள்
படுக்கைவிரித்துவிட வேண்டும்.
இலாட்டி அவ்வளவுதான்
என்ன நடக்குமென்று
சொல்லமுடியாது.
அப்புறம்
மாத்திரை மருந்து டோஸ்
அதிகமானால் பாடுபடப்போவது யார்?
அதனால் கோபம்வருமுன்
படுக்கை விரிக்கவேண்டியதுதான்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...