Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்!

மங்கலமாய்க் கோலமிட்டுச்
சங்கொலித்துத் தமிழெடுத்துப்
பொங்கலோ பொங்கலென்று
பூவையர்கள் பொங்கிடுவார்!
மஞ்சுவிரட்டுக் களத்தினிலே
மதர்த்துநிற்கும் காளகளை
சிங்கமெனச் சிலிர்த்தெழுந்து
கொம்புபிடித்து திமிலடக்கி
கட்டிப் பிடித்துவந்து
கழுத்தினிலே கட்டியுள்ள
பட்டுத்துணிபிரித்துக்
களியாட்டம் போடுகின்ற
காளையர்க்குக் கொண்டாட்டம்!
பொங்கலுக்கு மூணுநாள்
பூராவும் விடுப்பு என
பொங்கும் மகிழ்ச்சியிலே
பூத்திருக்கும் சிறார் கூட்டம்!
காணும் பொங்கலன்று
கன்னியரும் காளையரும்
வானம் தொட்டுவிடும்
வைபோக மகிழ்ச்சியிலே!
ஆற்றங் கரையினிலே
அடுத்தூரும் ஊற்றினைப்போல்
உற்றாரும் உறவுகளும்
உயர்ந்திருக்கப் பார்த்திடலாம்!
காணும் பொங்கலிது
கண்துஞ்சாப் பொங்கலிது!
கடல்கடந்து சென்றாலும்
கதிரவனின் ஆற்றல்பெற்று
களைப்பின்றிச் செயலாற்ற
மறத்தமிழன் கொண்டாடும்
மகர சங்கராந்தியிது!
மண்ணின் பெருமையிது!

1 comment:

Thenammai Lakshmanan said...

அருமை அருமை மண்மணம் வீசும் பொங்கல் அருமை..:)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...