Monday, November 8, 2010

காரைக்குடி நாகநாதபுரம் தெட்சிணாமூர்த்தி

ஆலிலைக் கண்ணன்முன்னே
ஆலயம் கண்டாய் போற்றி!
ஆலமர் கடவுள் போற்றி
ஆலமர் கடவுள் போற்றி!

மால் அயன் கோவில்முன்னே
மகிழ்வுடன் அமர்ந்தாய் போற்றி
மகிழ்வினைத் தாராய் போற்றி
மகிழ்வினைத் தாராய் போற்றி

காரையின் நாகநாத
ஊரினில் உவந்தாய் போற்றி!
பாரினில் உயர்ந்தாய் போற்றி!
பாரினில் உயர்ந்தாய் போற்றி!

ஊரணிக் கரையில் அமர்ந்து
ஊரினைக் காப்பாய் போற்றி!
ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
ஊழ்வினை தீர்ப்பாய்போற்றி!

சனகாதி முனிவர் போற்றும்
சற்குரு நாதா போற்றி!
சங்கடம் தீர்ப்பாய் போற்றி!
சங்கடம் தீர்ப்பாய் போற்றி!

பாறையில் நீர்சுரக்கும்
ஓரைந்து எழுத்தேபோற்றி!{குருவே நம}
காரையின் கவினே போற்றி!
காரையின் கவினே போற்றி!

கிழமையில் வியாழனன்று
தொழுக நற்பலனே போற்றி!
வளமெலாம் தருவாய் போற்றி!
வளமெலாம் தருவாய் போற்றி!

நெய்யினால் தீபம் ஏற்றி
நின்கழல் பணிவோம் போற்றி!
இன்னலைக் களைவாய் போற்றி!
இன்னலைக் களைவாய் போற்றி!

கொண்டைக் கடலை மாலை
கொண்டணி குருவே போற்றி!
தண்டமிழ் தருவாய் போற்றி !
தண்டமிழ் தருவாய் போற்றி!

மஞ்சளில் பட்டணிவித்தால்
மங்கலம் தருவாய் போற்றி!
பொங்கிடும் அருளே போற்றி!
பொங்கிடும் அருளே போற்றி!

மலரினில் முல்லைப்பூவை
மகிழ்வுடன் ஏற்பாய் போற்றி!
நெகிழவைத் திடுவாய் போற்றி!
நெகிழவைத் திடுவாய் போற்றி!

கன்னியர் மணவாழ் வமைய
எண்ணிய[து] அருள்வாய் போற்றி
தன்னிக ரில்லாய் போற்றி!
தன்னிக ரில்லாய்போற்றி!

கலைகளைக் கைவரக் கற்க
தருநிதிச் செம்மால் போற்றி!
கருணைசெய் கடலே போற்றி!
கருணைசெய் கடலே போற்றி!

வலம்வந்து வணங்கி நின்றால்
வல்வினை தீர்ப்பாய் போற்றி!
வல்லமை தருவாய் போற்றி!
வல்லமை தருவாய் போற்றி!

அரும்பணி ஆற்றத் துணையாய்
விரும்பியே அருள்வாய் போற்றி!
பெரும்புகழ் தருவாய் போற்றி!
பெரும்புகழ் தருவாய் போற்றி!

நினைத்ததை நடத்தி நன்மை
பயக்கவைக் கின்றாய் போற்றி!
வியக்கவைக் கின்றாய் போற்றி
வியக்கவைக் கின்றாய் போற்றி!

பாவினால் உன்னைப் பாட
நாவினில் நின்றாய் போற்றி!
காவியம் ஆனாய் போற்றி!
காவியம் ஆனாய் போற்றி!

நாரணன் முயன்று செய்ய
நல்லருள் தந்தாய் போற்றி!
நலமெலாம் தருவாய் போற்றி!
நலமெலாம் தருவாய் போற்றி!

1 comment:

Chitra said...

பக்தி பாமாலை, அருமையாக வந்து இருக்குதுங்க.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...