நல்லநாள் பார்த்து முளைப்பாரிக்கு உள்ள நவதானியம் கடையில்கேட்டு
வாங்கி வைக்கவேண்டும். கல்யாணத்துக்கு 2 நாள் முன்பு மாலையில் காசாணித்தவலை இருந்தால் அதை சுத்தம்பண்ணி எடுத்துவைத்து பெண்கள் ஆளுக்கு இரண்டுகை தானியம் எடுத்து தவலையில் போட்டு தண்ணீர் நன்றாக ஊற்றி வேடுகட்டி சாமிஅறையில் வைக்க வேண்டும். மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டிவிட்டு வேறு தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.அன்று மாலை தண்ணீரை வடிகட்டிவிட்டு அதை சிவப்புத்துணியில் கொட்டி கட்டி ஒரு சில்வர் சட்டியில் வைக்க வேண்டும்.மறுநாள் காலையில்பார்த்தால் சிறிது முளைகிளம்பி இருக்கும்.மறுபடி கட்டிவைத்து மாப்பிள்ளையை பெண்வீட்டுக்கு அழைத்து வரும்போது கூடவருபவர்கள் மறக்காமல் எடுத்துவர வேண்டும்.
No comments:
Post a Comment