Friday, July 19, 2024

பெண்வீட்டு நடைமுறைகள்

திருமணத்தின் முதல்நாள்

காலையிலேயே எடுத்துவைக்கவேண்டியவை

  

 பூரம் கழிப்பதற்கு ஐயரிடம் 

கேட்டு எழுதிவைத்து 

மறக்காமல் எடுத்துவைத்தல்


சடங்குத்தட்டில் சரியாக எடுத்துவைத்தல்

ஏழு கிண்ணங்களில் 


1)பிள்ளையார்

2)திருநீறு

3)விரலிமஞ்சள்

4)வெற்றிலைபாக்கு

5)பஞ்சு

6)உப்பு

7)பச்சரிசி

நிறைநாழியில்

நெல் எடுத்துவைத்து 

நடுவில் ஒருகத்தரிக்காய்

 வெள்ளியில் இருந்தாலும்வைக்கலாம்

குழவியும் அதற்கு உள்ளபட்டுத்துண்டும்

கைப்பெட்டியில் வைத்திருப்பதை வாங்கி  தயாராக வைத்தல்

 பால்பானை செம்பும் கெண்டிச்செம்பும் தயாராக வைத்தல்

தும்பு பிடிக்க கயிறு எடுத்துவைத்தல்

கொலமாவும் கொலம்போட 

வெள்ளைத்துணியும் மாவுகரைக்க 

கிண்ணங்கள் ஆறும் 

கோலச்சட்டம் இருந்தால் அதுவும்

எடுத்துவைத்தல்

கோலமாவு நேரம்கிடைக்கும்போது

பச்சரிசியில் ஆட்டி தட்டிக்காயவைத்து

எடுத்து வைத்தது.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்

காப்புக்கட்ட இரண்டு மஞ்சளும்

சிவப்புக் கலர் ரிப்பனும்

காலையில் மாப்பிள்ளை அழைப்பதற்கு

உள்ளவற்றை தாம்பாளத்தில்எடுத்துவைத்தல்

1)மாப்பிள்ளைக்கு உள்ள மாலை+பூச்செண்டு

2)நம்ம கோவிலில் இருந்து 

கோவில்மாலையுடன்வந்த

 திருநீறு குங்கும பிரசாதம்

3)விரலிமஞ்சள் 2

4)வெற்றிலை பாக்கு

5)எலுமிச்சம்பழம்2

6)மாப்பிள்ளைக்கு உள்ள

வேட்டி துண்டு

7)மாப்பிள்ளைக்கு அணியக்

கொடுக்கும் நகைகள்

(கைக்கெடியாரம்,கைச்சங்கிலி,

கழுத்துச் சங்கிலி,மோதிரம்

முதலியவை)

Wednesday, July 3, 2024

வள்ளுவப்பை

கழுத்திரு வாங்க பெண்வீட்டுக்கு

வயதான அனுபவமிக்க பெரியவர்கள் 

இரண்டுபேர் வள்ளுவப்பை கையில்


எடுத்துக்கொண்டு வரவேண்டும்.

வள்ளுவப்பையில், விரலிமஞ்சள் இரண்டு,

எலுமிச்சம்பழம் இரண்டு உப்புப்பொட்டலம்,








ஏடுக்கு உள்ளஎழுத்தாணி














குலம்வாழும் பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும்.














பெரியவர்களிடம் கேட்டு அவரவர் வழக்கப்படியும்

எடுத்துவைக்கலாம்.

மாப்பிள்ளை அழைப்பின்போதும் மாப்பிள்ளை 

வள்ளுவப்பையுடன் வரவேண்டும்

Sunday, June 23, 2024

வயது சாதனை 10

 

இவர் பெயர் இசக்கியாபிள்ளை

வயது தொண்ணூறு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் 

வடக்கு அய்யனூர்

தெருவில் வசிக்கிறார்.

 காலை உணவகம் நடத்துகிறார்.

இவர்கடை இட்லி மிகவும் பிரபலம்.

இட்லி தேங்காய் சட்னி,மல்லி சட்னி

உ.வடை மட்டுமே!காத்திருந்துதான் சாப்பிடவேண்டும்.13வயதில் இந்த தொழிலுக்கு வந்தவர்.இன்றுவரை

உழைப்பையும் உணவு சுத்தத்தையும் மட்டுமே நம்புகிறார்.காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து கடவுளை வணங்கி வீட்டிலிருந்து கடைக்கு ஒண்ணரை கிலோமீட்டர் நடந்தே வருகிறார்,உழைப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணமாய்த்திகழ்கிறார்.இவர் ஒரு மிகப்பெரிய வாழ்நாள் சாதனையாளர்தான்.நெஞ்சை நிமிர்த்தி தலை வணங்குவோம் 

முதிய இளைஞர் இசக்கியா பிள்ளையை.தொடரட்டும் பணி

பெண்பார்க்கும் நிகழ்வுக்குமுன் அப்பத்தா சொல்லிக்கொடுத்தது

     அலமியாச்சிக்கு பேத்திக்கு சீக்கிரமா கலியாணம் பண்ணிப்பாக்க ஆசை.
பேத்திக்குப் படிப்புமுடிய இன்னும் ஒருவருசம் இருக்கே ஆத்தா
அதுக்குள்ள என்ன அவசரம் என்று மகன்சொல்ல,பேத்திக்கோ
தனது பொறியியல் படிப்பைமுடித்து கொஞ்சநாள் வேலைக்கும்
சென்றுவர ஆசை.
    இப்பவேபேச ஆரம்பிச்சாதான் அப்பச்சி படிப்புமுடிஞ்சதும்
செய்யத் தோதாகஇருக்கும் என்று அப்பத்தா சொன்னதும்பெரியவர்கள் சொல்லுக்கு மதிப்புக்கொடுக்கும்அந்தக்குடும்பத்தில் அப்பத்தா சொன்னதைக்கேட்டார்கள்.தெரிஞ்சவுகளிடம் சொல்லிவைத்தார்கள்.
   படிப்புமுடிய ஆறுமாதம் இருக்கும்போது நல்லபேச்சாக மாப்பிள்ளையும்
பொறியியலாளராக அரசாங்கவேலையிலிருப்பவராக நல்ல இடமாக அமைந்தது.நல்லநாள் பார்த்து பெண்பார்க்க வருவதாகச்சொல்லிவிட்டார்கள்.

     அலமிஆச்சிக்கு ரொம்ப மகிழ்ச்சி.மகன் சொக்கலிங்கத்தையும் மருமகள்
மீனாட்சியையும் கூப்பிட்டுப் பக்கத்தில்வைத்துக்கொண்டு மாப்பிள்ளைவீடு
வருவதற்குமுன்னால் தயார்செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிக்கொடுத்தார்கள்.
    மாப்பிள்ளை பெண்பார்க்க வருவதற்கு பலகாரங்கள் செய்வது நம்வீட்டில்
வழக்கமில்லை.அதனால் கடையில் சோன்பப்டியும் மிக்சரும் அதை வைத்துக்கொடுப்பதற்கு பிளேட்டுகளும்,காப்பி,பால் முதலானவைகளும்
மாப்பிள்ளை வீட்டிலிருந்து எத்தனபேர் வருகிறார்கள் என்றுகேட்டு அதற்குத்தகுந்தாற்போல ஏற்பாடுசெய்து முன்கூட்டியே வாங்கி
வைக்கச் சொன்னார்கள்

    பெண்னுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்து  நல்ல மனிதர்களாக அமைந்தால் அவர்கள் சொல்லிக்கொள்ளும்போது கொடுப்பதற்கு எவர்சில்வர்வாளி,பழங்கள்,ரொட்டிக்கட்டு முதலானவை வாங்கிவைக்கவேண்டுமென்றார்கள்.
மாபிள்ளைக்கு பெண்பார்த்ததற்கு நாம் பேசிக்கொள்ளும் முறைகளுக்கு
ஏற்றார்ப்போல ரூபாயுடன் வெற்றிலைபாக்கும் வகைப்பழம் அதாவது
வாழைப்பழம் ஒருசீப்புடன் சாத்துக்குடி அல்லது ஆப்பிள் ஆரஞ்சு
இவற்றில் ஏதாவது இரண்டுவைத்துக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.
மாப்பிள்ளையின் தயார் தகப்பனார் இருவருக்கும் கொழுதனார் நாத்தனார்
இருந்தால் அவர்களுக்கும் அதுபோல் பழம்வைத்து மாப்பிள்ளைக்கு
வைத்ததுபோல[அதாவது மாப்பிள்ளைக்கு ரூ- 501/என்றால் மப்பிள்ளையின்
அப்பா+அம்மாவுக்கு-201+201ம் கொழுதனார் நாத்தனார்க்கு-ரூ-101+101ம்]
வைத்துக்கொடுப்பது என்றுமுடிவுசெய்து எல்லாம் எடுத்துவைத்தார்கள்
பெண்பார்க்க நம்வீட்டுக்கு வருபவர்களை 
சும்மா அனுப்பக்கூடாது மரியதைக்காக செய்வது
அவரவர் வழக்கப்படி துகை[ரூபாய்] வைக்கலாம்.

https://muthusabarathinam.blogspot.com/2024/02/blog-post.html

கோட்டை கட்டுதல்

 கல்யாணத்துக்கு முதல்நாள் நல்லநேரத்தில்

கோட்டை கட்டவேண்டும்

முன்பே சொல்லிவைத்து வைக்கோல் 

வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

நெல் பெரியபடிக்கு ஒருபடி எடுத்துவைக்கவேண்டும்.

ஒருபடி நெல் கொள்ளும் அளவைவிட கொஞ்சம் பெரிதாக 

ஒரு மஞ்சள்பை இருந்தால் எடுத்துவைக்கவும்.

அப்பதான் பையைக்கட்டி முடிய வசதியாஇருக்கும்

சமையல் மேஸ்திரியிடம் சொன்னால் ராசியான 

கோட்டைகட்டத்தெரிந்த ஆளாக வந்து

கட்டித்தரச் சொல்லுவார்.வைக்கோலை

நன்கு திரித்துக்கட்டுவார்.அதற்கு நாம் பணம் தரவேண்டும்.

முன்னூறு அல்லது ஐநூறு கேப்பார்.

மாப்பிள்ளை அழைப்பின்போது கோட்டையையும்

மறக்காமல் கூடவே ஒருஆளை எடுத்துவரச்செய்யவேண்டும்.


Friday, June 21, 2024

வயது சாதனை 9


 






















தினமலர் வாரமலரில்(6/09/2024)
வெளிவந்தது

Thursday, June 20, 2024

முளைப்பாரி

 நல்லநாள் பார்த்து முளைப்பாரிக்கு உள்ள நவதானியம் கடையில்கேட்டு


வாங்கி வைக்கவேண்டும். கல்யாணத்துக்கு 2 நாள் முன்பு மாலையில் காசாணித்தவலை இருந்தால் அதை சுத்தம்பண்ணி எடுத்துவைத்து பெண்கள் ஆளுக்கு இரண்டுகை தானியம் எடுத்து தவலையில் போட்டு தண்ணீர் நன்றாக ஊற்றி  வேடுகட்டி சாமிஅறையில் வைக்க வேண்டும். மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டிவிட்டு வேறு தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.அன்று மாலை தண்ணீரை வடிகட்டிவிட்டு அதை சிவப்புத்துணியில் கொட்டி கட்டி ஒரு சில்வர் சட்டியில் வைக்க வேண்டும்.மறுநாள்  காலையில்பார்த்தால் சிறிது முளைகிளம்பி இருக்கும்.மறுபடி கட்டிவைத்து மாப்பிள்ளையை பெண்வீட்டுக்கு அழைத்து வரும்போது கூடவருபவர்கள் மறக்காமல் எடுத்துவர வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...