Friday, July 19, 2024

பெண்வீட்டு நடைமுறைகள்

திருமணத்தின் முதல்நாள்

காலையிலேயே எடுத்துவைக்கவேண்டியவை

  

 பூரம் கழிப்பதற்கு ஐயரிடம் 

கேட்டு எழுதிவைத்து 

மறக்காமல் எடுத்துவைத்தல்


சடங்குத்தட்டில் சரியாக எடுத்துவைத்தல்

ஏழு கிண்ணங்களில் 


1)பிள்ளையார்

2)திருநீறு

3)விரலிமஞ்சள்

4)வெற்றிலைபாக்கு

5)பஞ்சு

6)உப்பு

7)பச்சரிசி

நிறைநாழியில்

நெல் எடுத்துவைத்து 

நடுவில் ஒருகத்தரிக்காய்

 வெள்ளியில் இருந்தாலும்வைக்கலாம்

குழவியும் அதற்கு உள்ளபட்டுத்துண்டும்

கைப்பெட்டியில் வைத்திருப்பதை வாங்கி  தயாராக வைத்தல்

 பால்பானை செம்பும் கெண்டிச்செம்பும் தயாராக வைத்தல்

தும்பு பிடிக்க கயிறு எடுத்துவைத்தல்

கொலமாவும் கொலம்போட 

வெள்ளைத்துணியும் மாவுகரைக்க 

கிண்ணங்கள் ஆறும் 

கோலச்சட்டம் இருந்தால் அதுவும்

எடுத்துவைத்தல்

கோலமாவு நேரம்கிடைக்கும்போது

பச்சரிசியில் ஆட்டி தட்டிக்காயவைத்து

எடுத்து வைத்தது.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்

காப்புக்கட்ட இரண்டு மஞ்சளும்

சிவப்புக் கலர் ரிப்பனும்

காலையில் மாப்பிள்ளை அழைப்பதற்கு

உள்ளவற்றை தாம்பாளத்தில்எடுத்துவைத்தல்

1)மாப்பிள்ளைக்கு உள்ள மாலை+பூச்செண்டு

2)நம்ம கோவிலில் இருந்து 

கோவில்மாலையுடன்வந்த

 திருநீறு குங்கும பிரசாதம்

3)விரலிமஞ்சள் 2

4)வெற்றிலை பாக்கு

5)எலுமிச்சம்பழம்2

6)மாப்பிள்ளைக்கு உள்ள

வேட்டி துண்டு

7)மாப்பிள்ளைக்கு அணியக்

கொடுக்கும் நகைகள்

(கைக்கெடியாரம்,கைச்சங்கிலி,

கழுத்துச் சங்கிலி,மோதிரம்

முதலியவை)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...