Tuesday, July 26, 2011

காரைக்குடி செக்காலைச் சிவன்கோவில் வைத்தீசுவரன்.

பையவே வந்துநீ பண்டியற்காகவே
பழவினை ஓட்டியவா!
ஐயனே உன்னடி அகத்தினில் ஏந்தினோம்
அன்பினைக்காட்டிடுவாய்!

தையலின் பாதியே தாங்கிடும் மதியொடு
கங்கையும் சூடிடுவாய்!
மெய்யெலாம் நீறணி மேலான தேவனே
மெய்சிலிர்த் துனைநாடினோம்!

உனைநாடி உனைநாடி ஒடோடி வருபவர்
உள்ளம்மகிழ வைப்பாய்!
நினைவெலாம் நீயாகி நித்தம்து தித்திட
நெஞ்சினை நெகிழவைப்பாய்!

கன்றோடு பசுவுமே காலையில் எழுந்ததும்
காண ‘கோ’ பூஜைசெய்வார்
நன்றாகச் செக்காலை நகரத்தார் கூடியே
திருப்பணி செய்யவைத்தாய்!

நன்றியில் மிதக்கிறோம் நானிலம் புகழவே
நல்லருள் தந்தாயப்பா!
மன்றினில் ஆனந்த நடனமே ஆடிடும்
மன்னனேவைத்தீஸ்வரா!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

தையலின் பாதியே தாங்கிடும் மதியொடு
கங்கையும் சூடிடுவாய்!
மெய்யெலாம் நீறணி மேலான தேவனே
மெய்சிலிர்த் துனைநாடினோம்!//

சிலிர்க்கவைத்த அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Thenammai Lakshmanan said...

அருமை..:)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...