Tuesday, August 9, 2011

காரைக்குடி செக்காலைச்சிவன்கோவில் தையல்நாயகி.

அஞ்செழுத் தானவன் அருகமர் தேவியே
             அன்னைதை யல்நாயகி!
நெஞ்சிலே வைத்துனை நித்தமும் துதித்திட
                நிம்மதி தரும்நாயகி!
மஞ்சளும் குங்குமம் மனையிலே நிலைத்திட
               மகிழ்வரம் தருவாயம்மா!
தஞ்சமென வந்தவர் தடையெலாம் விலகிட
              தண்ணருள் புரிவாயம்மா!
நூபுரப் பாதங்கள் நொடியிலே காட்டியே
             நொந்தவர் மகிழவைப்பாய்!
கோபுரம் சமைத்துஉன் கோவில் சிறக்கவே
              குடும்பங்கள் கூட்டிவைத்தாய்!
மனையிலுள் லோரெலாம் மகிழ்ந்துஉன்கோவிலில்
            ‘மா’ பணி செய்யவைத்தாய்
நனைகின்ற அன்பாலே நல்லருள் செய்துநீ
            ‘மா’பலம் பெருகவைப்பாய்!
நன்றாக நன்றாக நாநிலம் போற்றவே
           நல்லுயர்[வு] எய்தவைப்பாய்!
மன்றினில் ஆடுசிவன் மகிழ்மனை யாட்டியே
                அம்மைதை யல்நாயகி!




1 comment:

Chitra said...

அம்மா, எப்படி இருக்கீங்க? நலமா? மீண்டும் பதிவுகள் பக்கம் வந்துட்டேன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...