Friday, July 15, 2011

பிச்சை

மனிதன் மனிதனுக்குச் செய்யும் உதவி
மனிதாபிமானம்

இறைவன் மனிதனுக்குச் செய்யும் உதவி
கருணை

இயலாதவன் வேண்டிப்பெறுவது
தர்மம்

இறவனுக்குத் திருப்பணிசெய்ய
எப்பேர்ப்பட்ட பணம்படைத்தவரும்
மற்றவரிடம் பணம்வேண்டிப்பெறுவது
கௌரவப்பிச்சை!

அன்புப் பிச்சை
அருட்பிச்சை
ஆகமப் பிச்சை---- [ஆகமம்=வேதம்]
இளங்கிளைப் பிச்சை---[இளங்கிளை=பிள்ளை]
ஈவிரக்கப் பிச்சை
உரிமைப் பிச்சை
ஊக்கப் பி ச்சை
எண்ணப் பிச்சை
ஏடணைப் பிச்சை----[ஏடணை=விருப்பம்]
ஐக்கியப் பிச்சை--ஐக்கியம்=ஒற்றுமை]
ஒழுக்கப் பிச்சை
ஓதனப் பிச்சை---ஓதனம்=அன்னம்]
ஔசித்தியப் பிச்சை----[ஔசித்தியம்=தகுதி]

இறைவன்கொடுத்த
அறிவுப்பிச்சை!

இப்படி பிச்சைக்குப்
பொருள்சொல்லிகொண்டே
வளர்க்கலாம்!

இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதேயில்லை.

என்பது அனுபவமிக்கவர்கள்சொன்ன
அறிவுரை.
                                              வணக்கம்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...