Sunday, October 17, 2010

சரஸ்வதி பாடலும் சரஸ்வதியின் வேறுபெயர்களும்




16-10-2010 தினமலர் நாளிதழில் வெளிவந்தது 

மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியேஅன்னமே மனக்கூர் இருளுக்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின்னே இனி வேறு தவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே!
-    கம்பர்
                                                                                                                    
சரஸ்வதி கல்விப்பயிர் வளர்ப்பவள்
குமரகுருபரர் சரஸ்வதிமீது பாடியது சகலகலாவல்லி மாலை.
ஆதிசங்கரர் சிருங்கேரியில் உருவாக்கிய சரஸ்வதி சாரதாம்பாள்.
மணிமேகலை காப்பியம் சரஸ்வதியை சிந்தாதேவி என்று குறிப்பிடுகிறது.
ஞானபீடம் பரிசில் இடம்பெறும் சின்னம் வாக்தேவி.
சரஸ்வதிக்குரிய திதி நவமி திதி.
சரஸ்வதிக்குரிய மலர் வெண்தாமரை
சரஸ்வதிக்குரிய வாகனங்கள் அன்னம் மயில்

வேறு பெயர்கள்
கலை மகள்
நாமகள்
பாரதி
வாணி
இசைமடந்தை
ஞானவடிவு
பனுவலாட்டி
ப்ராஹ்மி
பூரவாகினி
அயன் மனைவி
வெண்தாமரையாள்
சாவித்ரி
வேதவல்லி
கலையரசி
நாவுக்கரசி
ஞானப்பூங்கொடி
வித்யா சரஸ்வதி
கலை ஓதும் மலர்மாது
கலைக்கொடி
கலை ஞானத்தோகை
கலை ஞானவல்லி
கலை ஞானாம்பிகை
கலை மடந்தை
கலைமான்
கலைப் பெருமாட்டி
கலை மின்னாள்
கலையணங்கு

கலையம்மா
கலாராணி
கலாசுந்தரி
கலைவாணி
கலைச்செல்வி
கமலவல்லி
வெண்கமல நாயகி
வெண்டாமரைச் செல்வி
வெண்கமல பனுவலாட்சி
வீணை வித்யாம்பிகை
ஆயகலைப் பாவை
கலைமகளைவழிபடுவோர் நவமி நாளிலோ அல்லது
மூலநட்சத்திரத்தன்றோ வழிபாடு செய்வது சிறப்பு
புரட்டாசி நவமி சரஸ்வதிக்குரிய மகாநவமி
                                                                    
இந்தப் புரட்டாசி நவமி அனைவருக்கும் சிறப்பாக இருக்கும்
என்ன சரஸ்வதி பற்றிய செய்திகளைப் படித்தாச்சா
இனிநாள் தோறும் சரஸ்வதியை வணங்கி உங்கள் வேலைகளைத்
துவங்குங்கள்.
                                                                                     நன்றி வணக்கம்.


இதுவரை எனக்குச் சரஸ்வதியைப்பற்றித் தெரியாதுஇருந்த சிலசெய்திகளைத் தினமலரில் பார்த்தவுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது .





2 comments:

ராமலக்ஷ்மி said...

இத்தனை பெயர்களா? பகிர்வுக்கு நன்றி!

sakthi said...

நல்ல பகிர்வு அம்மா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...