Friday, October 22, 2010

மகன்வீட்டுப் பேத்தி

குட்டிக் குட்டி நந்தவனம்
குடைபிடித்து வந்ததுவோ!
சுட்டிசெய்யும் சுறுறுப்பு
சுந்தரமாய் மலர்ந்ததுவோ!
சொர்க்கம் காட்டும் புன்னகையே
சொந்தமாக்கிக் கொண்டதுவோ!
நர்த்தனம்தான் நளினமோ
நடையழகாய் வந்ததுவோ!
மெட்டிநடை ஓசைகேட்டு
மென்னகையைக் கூட்டியதோ!
பட்டுச்சேலை சத்தம்கேட்டு
பரவசமாய்த் திரும்பிப்பார்த்து
பக்கம் வந்து அம்மாவின்
பக்குவத்தில் வளர்ந்ததுவோ!
முத்துமுத்துப் பாப்பா நீ
முழுநிலவின் குளிர் ஒளியே!
முத்துநகை சூடிய உன்
முகம்காட்டி வந்திடுக!
சத்தமின்றி ஓடிவந்து
முத்தம் ஒன்று தந்திடுக!

பேரன் பேத்திகள் என்றாலே எல்லோருக்கும் ஓவியம்தானே!

என்னங்க நாஞ்சொல்றது?!  
                  

1 comment:

ஸ்ரீராம். said...

தமிழ் அமுதம்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...