Thursday, October 28, 2010

முகம்

அகம்வலிக்கப் பிறந்த
அன்புக் குழந்தைக்கு
முகம் பார்க்கும்
கலையைத்தான்
முதலில் பயிற்றுவிப்போம்!
அன்னை முகம்தவிர
அடுத்தமுகம் கண்டால்
கண்ணை உருட்டிக்
கடைவாயைப் பிதுக்கி அழும்
களங்கமில்லாக் குழந்தைமுகம்
பேசத்துவங்கும் குழந்தையின்
தேன்சிந்தும் சிந்தூரமுகம்!
சேதிகள் சொலும்
செந்தமிழ் முகம்!
சாதிக்கின்ற சாந்தமுகம்!
கம்பீரத்தில் சிங்கமுகம்!
சிரிக்கும்போது சிங்காரமுகம்!
கருணை காட்டும்
கனிந்த முகம்!
கருத்த முகம்
களையான முகம்!
சொந்தம் விரும்பும்
சூரிய முகம்!
எந்திரன் காட்டும்
இந்திர முகம்!!
பற்றுக் கொண்டதால்
பழகிய முகம்!
கற்றுக் கொண்ட
கவிதை முகம்!
புதியவர் எல்லாம்
பொதுவாக்கிப்
புதுயுகப் புத்தகம்
காட்டும் முகம்!
முகப்புத்தகத்தில்
நுழைந்து நுழைந்து
மற்றவையெல்லாம்
மறந்தமுகம்!
சேரன் சுருக்கிச்
சொன்ன முகம்!
சிந்தனையாலே
பிறந்த முகம்!

2 comments:

சசிகுமார் said...

super kavithai amma

Chitra said...

முகப்புத்தகத்தில்
நுழைந்து நுழைந்து
மற்றவையெல்லாம்
மறந்தமுகம்!
சேரன் சுருக்கிச்
சொன்ன முகம்!
சிந்தனையாலே
பிறந்த முகம்!


.......அம்மா, கவிதையில், நீங்கள் கருத்துக்களை கோர்த்து தந்து இருக்கும் விதம் - அருமை.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...