Monday, May 4, 2020

அமைதி வாழ்க்கை அழகாய் மலர

அச்ச உணர்வின்றி
ஆற்றலைப் பெருக்கி
இல்லத்தில் இருந்து
ஈர நெஞ்சோடு
உலகம் உணர்ந்து
ஊரடங்கு வீடடங்கால்
எளிமையாய் வாழ்ந்து
ஏராள நன்மைகளை
ஐயமின்றித் தெளிந்து
ஒதுங்கி இருந்து
ஓம் என்று தியானித்து
ஈசன் அடிபணிவோம்
எல்லாம் நன்மைக்கே!
எல்லாம் அவன்செயல்!

ஒற்றுமை என்றும்
உயர்வே என்ற
இந்தியர் பண்பாடு
என்றும் துலங்க
அரசின் ஆணை
அவசியம் ஏற்போம்!
அமைதி வாழ்க்கை
அழகாய் மலரும்!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...