Sunday, July 17, 2011

.சிவாய நம.

நமச்சிவாய என்று
நாவினிக்கத் தினம்சொல்லி

நகரச் சிவன்கோவில்
நற்பணியை யாம்பார்க்க

அள்ளிக் கொடுக்கின்ற
அன்னை மீனாட்சி
அருகிருந்து அணிசெய்யும்
பெருமருந்தாம் சுந்தரேசர்

பெருமையுடன் எமக்களித்தார்
பேறுபெற்றோம் வாழ்க்கையிலே

சித்திரையின் முதல்நாளில்
நகரத்தார் ஒன்றுகூடி

பஞ்சாங்கம் படித்து
பஞ்சமூர்த்தி உலாவைத்து

கரைக்குஒரு மக்களென்று
கணக்குப்பாக்க ஒருவரும்
நகைப்பொறுப்பு ஒருவரும்
சுற்றுப்புறச் சூழலை
மேப்பாக்க ஒருவரும்

தேர்ந்தெடுத்துக் கோவிலுக்குத்
தொண்டுசெய்யப் பொறுப்பேற்று

தினந்தோறும் கோவில்வந்து
திறம்படவே நடத்திடுவார்!

நகரத்தார் இளஞரெல்லாம்
நற்பணிமன்றம் வைத்து
ஊழியங்கள் செய்வதுமே
உற்சாகமாய்ச் செய்வார்!

சித்திரைத் திருவிழாவும்
வைகாசி விசாகமும்
ஆனித்திரு மஞ்சனமும்
ஆடிப்பூரமுடன்
ஆவணி அவிட்டமும்
புரட்டாசி நவராத்திரி
ஐப்பசியில் அன்னாபிஷேகம்
கார்த்திகையில் தீபமும்
மார்கழியில் திருவாதிரை,
தைப்பூசக் காவடிகள்
தங்கிப் பிறப்பிடுதல்
மாசியில் வரும்மகமும்
மகாசிவ ராத்திரியும்
பங்குனியில் உத்திரமும்

இடயிடையே வேண்டுதல்
செய்து கொண்டவர்க்காக
ஒவ்வொரு மாதத்திலும்
ஒவ்வொரு நாளும்
தினம்வந்து சிவன்தாள்கள்
மனங்கொள்ள வணங்கி

அங்கியினைச் சாற்றி
அழகு நகைபூட்டி
எங்கும்நிறை பரம்பொருளின்
எழிற்கோலம் கண்பூட்டி
சிக்கெனப் பிடித்து
சிந்தையிலே தான்கூட்டி.....

பூமியிலே பிறந்ததற்கு
சாமிக்குப் பணிசெய்ய
நாமெல்லாம் செய்ததவம்!
நல்வினைப் பயனன்றோ!!















1 comment:

Rathnavel Natarajan said...

நற்பணிகள் வாழ்க.
வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...