Wednesday, June 1, 2011

புரவி எடுப்புக்கு நாள்வைத்தல்.

முன்பே பேசிவைத்து
முடிவு செய்தபடி

நகரத்தார் கிராமத்தார்
கோவிலிலே ஒன்றுகூடி

நாள்வைக்க நாள்பார்த்து
முப்பலி பூசைபோட்டு

பிள்ளையார் பெருமாளுக்கு
பிரியமுடன் தளிகையிட்டு

அம்பாள், ஆஞ்சநேயர்,
முனியையா, கட்டுக்கருப்பர்

அத்தனைக்கும் மாலைசாத்தி
அருச்சனைகள் செய்துவைத்து

மட்டைகட்டிக் கொண்டுவந்து---[பனைஓலையில் செய்வது]
மக்களுக்கு அன்னமிட்டு

கட்டுக் கோப்பாக
காளாஞ்சி கொடுத்து

இன்றுமுதல் ஏழுநாளும்
ஒவ்வொரு நாளுக்கும்

ஆறு ஊர் நகரத்தார்
ஊரோடு உயர்கவென

வேளார் விருப்பமுடன்
அருச்சனைகள் செய்வித்து

நகரத்தார் படித்திறத்தை
நன்றாகச் செய்துவைத்து

ஒவ்வொரு நாளுக்கும்
உடன்வந்து பிரசாதம்
உவப்புடனே தந்திடுவார்!!

ஊர்மக்கள் எல்லோரும்
ஊழியங்கள் செய்திடுவார்

எட்டாவது நாளில்
எழில்மிகு புரவியெடுப்பு!

[பனை ஓலையில் செய்து கொண்டுவரும்
இந்த மட்டையை செய்து கொண்டுவராவிட்டால்
பெரிய பிரளயம் மதிரி சண்டை வந்துவிடும்.
ஆகையால் உணவிடுவதற்குமுன்
மட்டை வந்துவிட்டதா?! என்று
கவனம்செய்துகொள்ளவேண்டு]ம்



3 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
செட்டி நாட்டு கலாச்சாரத்தை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.
நன்றி அம்மா.

இராஜராஜேஸ்வரி said...

எழில்மிகு புரவியெடுப்பு!//
Nice..

Unknown said...

Excellent

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...