Friday, May 3, 2024

கல்யாணம்சொல்லுதல்

 முகூர்த்தக்கால் ஊன்றியதும்

முக்கியமாய் வீட்டுக்குள்

ஓலைத் தடுக்கினிலே

ஓவியமாய் உக்காந்து

தலப்பா கட்டிக்கிட்டு

தேங்காய்பழத்துடனே

(வாளிக்குள் பணம் அவரவர்

வீட்டு வழக்கப்படி வைத்து)

 வெற்றிலையும் பாக்குவைத்து

பேழைக்கும் பெரியவீட்டுக்கும்

வீட்டிலுள்ள பெரியவர்க்கும்

அண்ணன் தம்பிக்கும்

அழைப்புவைத்துக் கூப்பிட்டு 

ஆயாள் வீட்டுக்கும் அத்தை வீட்டுக்கும்

அதுபோலக் கூப்பிடணும்!

(அந்தக்காலத்துல

முகூர்த்தக்கால் ஊன்றியதும்

அந்தவீதியில் உள்ள 

வீடுகளுக்குமுன்பாகச்சென்று

கல்யாணத்துக்கு வாங்கன்னு

கல்யாணஞ்சொல்றது வழக்கம்)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...