மலைக்கவைக்கும் நிலைவைத்து!
மாண்புறவே செதுக்கிவைத்து!!
மனைக்குவரும் மக்களெல்லாம்
மல்லாந்து பார்க்கவைத்து!!!
நிலைக்கவேண்டும் எனநினைத்து
நிலைவைத்துக் கட்டினார்கள்!
அகப்பக்கம் தெரிவதற்கு
முகப்புவைத்துக் கட்டினார்கள்!
முகப்புக்குள் நுழைகையிலே
முல்லைப்பூ வாசம்வரும்!
[ஒரு வீட்டின் முகப்புக்குள் நுழைகையிலே
அந்த வீட்டின் செல்வச்செழிப்பும்
அழகு ரசனையும் விருந்தோம்பலும்
தெளிவாகத் தெரியவரும்!]
தொட்டதெல்லாம் துலங்கவென்று
பட்டாலை கட்டினார்கள்!
[வீட்டில் முக்கியமான நிகழ்ச்சிகள்
பற்றிய செய்திகள் எல்லாம் இந்தப்
பட்டாலையில் வைத்துத்தான்
பெரியவர்களால் முடிவு
எடுக்கப்படும்]
அளவில் பெரிதாக
அழகுவரிசைத் தூண்வைத்து
அளவில்லாச் செல்வம்பெற
வளவுதனைக் கட்டினார்கள்!
[அதாவது குழந்தைச் செல்வங்கள்
ஓடிப்பிடித்து விளையாடுவதற்கு]
ஆலமரம் போல்செழித்து
அருகுபோல் வளரவென்று
ஆல்வீடும் கட்டினார்கள்!
[எல்லா வீடுகளிலும் அதிகப்படியாக
உள்ள மரப்பீரோல்கள் எல்லாம்
இங்குதான் வைப்பார்கள்.
குளிர்காலங்களில் படுப்பதும்
இங்குதான்]
இரண்டிரண்டாய்ப் பெருகிவந்து
இல்லம் செழிக்கவென்று
இரண்டாங்கட்டும் கட்டினார்கள்!
[பந்திக்கட்டு என்றும் சொல்வார்கள்.
திருமணம் போன்ற முக்கிய
நிகழ்ச்சிகளுக்கு விருந்துவைப்பது
இங்குதான்]
இடுப்பு வலிக்காமல்
இருந்து சமைப்பதற்கு
அடுப்படி வசம்பார்த்து
அழகுறவே கட்டினார்கள்!
[தரையில் இருந்து அல்லது
குனிந்து சமையல் செய்யும்போது
வயிற்றில் அனல் தாக்காது.
அதனால் கர்ப்பப்பை
பாதுகாக்கப்படுகிறது]
இல்லையென்று சொல்லாமல்
அள்ளித் தருவதுமே
அளவறிந்து செய்தார்கள்!
[ஆற்றில் கொட்டினாலும்
அளந்துகொட்ட வேண்டும்
என்பார்கள்]
ஆனால் இன்று.....?!
----------------------------
http://muthusabarathinam.blogspot.in/2012/01/blog-post_
மாண்புறவே செதுக்கிவைத்து!!
மனைக்குவரும் மக்களெல்லாம்
மல்லாந்து பார்க்கவைத்து!!!
நிலைக்கவேண்டும் எனநினைத்து
நிலைவைத்துக் கட்டினார்கள்!
அகப்பக்கம் தெரிவதற்கு
முகப்புவைத்துக் கட்டினார்கள்!
முகப்புக்குள் நுழைகையிலே
முல்லைப்பூ வாசம்வரும்!
[ஒரு வீட்டின் முகப்புக்குள் நுழைகையிலே
அந்த வீட்டின் செல்வச்செழிப்பும்
அழகு ரசனையும் விருந்தோம்பலும்
தெளிவாகத் தெரியவரும்!]
தொட்டதெல்லாம் துலங்கவென்று
பட்டாலை கட்டினார்கள்!
[வீட்டில் முக்கியமான நிகழ்ச்சிகள்
பற்றிய செய்திகள் எல்லாம் இந்தப்
பட்டாலையில் வைத்துத்தான்
பெரியவர்களால் முடிவு
எடுக்கப்படும்]
அளவில் பெரிதாக
அழகுவரிசைத் தூண்வைத்து
அளவில்லாச் செல்வம்பெற
வளவுதனைக் கட்டினார்கள்!
[அதாவது குழந்தைச் செல்வங்கள்
ஓடிப்பிடித்து விளையாடுவதற்கு]
ஆலமரம் போல்செழித்து
அருகுபோல் வளரவென்று
ஆல்வீடும் கட்டினார்கள்!
[எல்லா வீடுகளிலும் அதிகப்படியாக
உள்ள மரப்பீரோல்கள் எல்லாம்
இங்குதான் வைப்பார்கள்.
குளிர்காலங்களில் படுப்பதும்
இங்குதான்]
இரண்டிரண்டாய்ப் பெருகிவந்து
இல்லம் செழிக்கவென்று
இரண்டாங்கட்டும் கட்டினார்கள்!
[பந்திக்கட்டு என்றும் சொல்வார்கள்.
திருமணம் போன்ற முக்கிய
நிகழ்ச்சிகளுக்கு விருந்துவைப்பது
இங்குதான்]
இடுப்பு வலிக்காமல்
இருந்து சமைப்பதற்கு
அடுப்படி வசம்பார்த்து
அழகுறவே கட்டினார்கள்!
[தரையில் இருந்து அல்லது
குனிந்து சமையல் செய்யும்போது
வயிற்றில் அனல் தாக்காது.
அதனால் கர்ப்பப்பை
பாதுகாக்கப்படுகிறது]
இல்லையென்று சொல்லாமல்
அள்ளித் தருவதுமே
அளவறிந்து செய்தார்கள்!
[ஆற்றில் கொட்டினாலும்
அளந்துகொட்ட வேண்டும்
என்பார்கள்]
ஆனால் இன்று.....?!
----------------------------
http://muthusabarathinam.blogspot.in/2012/01/blog-post_
3 comments:
அருமை!
அழகு....
அருமை.அருமை
Post a Comment