Sunday, December 16, 2012

முருகன் பூசை வீடு.

மேவுபுகழ் காரைநகர் மீதினிலே கரையமைந்த
ஆவுடையாஞ் செட்டிவகை ஆதரிக்கும் குணமுடயார்!
பூவுடைய மணமெனவே புகழ்மிக்கார் தகவுடையார்!
தாவுமயில் ஏறிவரும் தமிழ்க்குமரன் கந்தனுக்கு
பார்த்துவைத்த நன்னாளில் பங்காளி எல்லோரும்
கார்த்திகையின் திங்களிலே கருத்துடனே கூடிவந்து
முன்னோர்கள் இட்டபடி முறையாகப் பூசைவைத்து
தன்னேரில் தமிழாலே தக்கபடி அர்ச்சித்து
வருவிருந்து பார்த்திருந்து வந்தாரைஉபசரித்து
வருடத்தில் ஒருநாளில் வடிவழகாய் அலங்கரித்து
பள்ளயத்தில் அன்னமதைப் பக்குவமாய் இட்டுவைத்து
புள்ளியெலாம் பெருகிவரப் பூந்தமிழால் பாட்டிசைத்து            
கமகமக்கும் விருந்ததனைக் களிப்போடு பூசையிட்டு
சமபந்தி போசனமாய்ச் சகலருக்கும் விருந்துவைப்பார்!
மாவிளக்கு ஏற்றிவைத்து மகிழ்வோடு தந்திடுவார்!
பானகமும் பூசயிட்டுப் பாசமுடன் பகிர்ந்தளிப்பார்!
பூசயிட்டு வணங்குதற்குப் புள்ளிமயில் முருகனுக்கு
ஆசையுடன் ஒருவீடு ஆங்கே கட்டிவைத்தார்!

நல்லாராம் நம்வீட்டுப் பெண்மக்கள் குழந்தைகள்
எல்லோரும் கலந்துகொண்டு இன்புற்று மகிழ்ந்திருக்க
தன்னேரில் தமிழழகன் தண்டபாணி ஐயனவன்
பொன்னான தாள்பணிந்து புண்ணியங்கள் பெற்றிடுவோம்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...