Sunday, September 18, 2011

மானகிரி முருகன்!

ஆனைமுகன் தம்பியே மானகிரி சிறக்கவே
               மகிழ்வுடன் வந்தமர்ந்தாய்!
ஆனதொழில் அனைத்துமே ஆல்போல் தழைத்திட
              அருள்செய்த ஆறுமுகமே!
மன்புகழ் வாழ்வமைய மகிழ்மனை வேண்டியே
             மக்களும் நாடிவருவார்!
ஒன்பது கோள்களும் ஒன்றாகத் துணையுடன்
             உல்லாசக் காட்சிதருவார்!
நன்றாக மயில்மீது நங்கைதெய்வானையும்
           வள்ளியுடன் கோவில்கொண்டாய்!
மன்றாடும் உன்னப்பன் மகிழ்வோடு வந்துனது
           பக்கத்தில் அமரவைத்தாய்!
ஊரோடும் உறவோடும் உன்தேரை வடம்பிடிக்க
           ஊராரை ஒன்றுசேர்த்தாய்!
பேரோடு புள்ளிகள் பெருகியே வளர்ந்திட
          பிரியமுடன் அருள்புரிவாய்!    
மானகிரி நகரத்தார் மகிழ்வோடு பணிசெய்ய
          மாபெரும் சக்திதந்தாய்!
வானுயர் புகழோடு வளர்கல்வி செல்வங்கள்
          வாரியே வழங்கிடவா!

1 comment:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...