Tuesday, March 22, 2011

பிடிமண் எடுத்தல்.

கருத்த மீசை
கையில் வீச்சரிவாள்

சிரித்த முகத்தில்
சீறும் விழிகள்!

குட்டிவெட்டிப் பூசைபோட்டு
குலசாமி கும்பிட்டு

வீறுகொண்ட வேங்கைபோல்
வீச்சரிவள் மின்னலிட

கால்சலங்கை கலகலக்க
வேல்போட்டு ஆடிவர

குடையும் கொடியும் ராச
நடைபோட்டு அழைத்துவர















குலவையிடும் கிராமத்தார்
அலையலையாய் அடுத்துவர

கொட்டும் அதிர்வேட்டும்
 கூடி முழக்கிவர

புரவி எடுப்புக்கு
பிடிமண்ணு எடுத்துவர

சாப்பாடு கோயிலிலே
சகலருக்கும் அன்னமிட்டு

காளாஞ்சி கொடுத்து
களிப்பில் மிதக்கவிட்டு

பாக்கவந்த பேருக்கெல்லாம்
பாக்கும் வெத்திலையும்

புலவர் பாட்டிசைக்க
புவியெல்லாம் ஆனந்தம்

வேளார்க்கு மரியாதை
வளமாகச் செய்து
வீட்டில் அழைத்துவிடல்.

         புரவிஎடுப்புக்குப் புரவிசெய்ய மண் எடுப்பது
ஊர்கூடிப் பெரிய விழாவாக நடத்தப்பெறுகிறது.
இது எங்கள் குலதெய்வம் ஆதீனமிளகி ஐயனார்
கோவிலில் நான்கண்ட முதல் பிடிமண்எடுக்கும்
விழா.பிடிமண் எடுக்கும் இடத்திற்கு பெண்கள்
செல்லக்கூடாது என்றுசொன்னதால் நான்போய்
பார்க்கவில்லை.இரவு எட்டுமணிமுதல் பதினொரு
மணிவரை இந்தவிழா நடந்தது.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

நான்கண்ட முதல் பிடிமண்எடுக்கும்
விழா.//
வாழ்த்துக்கள்.

Mey said...

Mika Arumai.

Periya Karuppanna Swamikku Arohara...!!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...