Thursday, May 11, 2017

ஆராவயல் வீரமாகளி அம்பாள்.

சித்திரைச் செவ்வாயில் திருவிழா நடக்குமே
               சிங்காரக் கொலுவிருப்பாய்!
எத்திக்கி லிருந்தாலும் எழிற்கோலம் காணவே
               எல்லோரும் ஓடிவருவார்!

வேண்டிவரம் கேட்டவர்க்கு விளையாடப் பிள்ளையும்
              விரும்பியதும் தந்தருள்வாய்!
ஆண்டியென உள்ளவரும் அடிபணிந்து ஏத்தவே
              அழியாத பொருள்தருவாய்!

மழலையர்க்குத் தொட்டில்கட்டி மகிழ்வோடு பொங்கலிட்டு
              மாவிளக்கும் ஏற்றிவைப்பார்!
மாவாலே களிக்கிண்டி மக்களுக்குப் பகிர்ந்தளிக்க
              நோகாமல் நோய்கள் தீர்ப்பய்!

பால்குடங்கள் காவடிகள் முளைப்பாரி தீச்சட்டி
               பாதத்தில் சேர்க்க வருவார்!
வேல்கொண்டு துன்பங்கள் விரைந்தோட வைப்பாயே
               வீரமா காளிஉமையே!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...