Wednesday, December 7, 2016

மக்களுக்கு அம்மாவாய்....

தங்கத் தமிழ்நாட்டைத்
தரணியிலே உயர்த்துதற்கு
சிங்கத் திருமகளாய்
சீறும் குரலானாய்!
பங்கமின்றிப் பலமொழிகள்
பார்வியக்கப் பேசிடுவாய்!
வங்கக் கடலோரம்
வள்ளல் அருகமர்ந்தாய்!

கேரளமும் கன்னடமும்
கீர்த்திமிகு தமிழ்நாட்டை
பேரழகாய் ஆண்டதுவே!
பார்போற்றச் சமத்துவமாய்!!

மங்காமல் புகழ்சேர்த்த
மன்னுபுகழ் தமிழகத்தில்
திங்கட் கிழமையிலே
திருவடிகள் சேர்ந்துவிட்டாய்
பொங்கிவரும் புன்சிரிப்பு
பூத்த மலர்முகத்தை
எங்கே இனிக்காண்போம்
இதயங்கள் உலுக்கிவிட்டாய்!

பொற்குவியல் விட்டுவிட்டு
புதுஉலகம் சென்றுவிட்டாய்!
சுற்றிவரும் பகைவிலக்கும்
சுத்தமன நட்பிருக்க,
சுற்றமெல்லாம் உனக்காகத்
தோள்கொடுக்கக் காத்திருக்க
மற்றுமொரு பிறப்பெடுத்து
மக்களுக்கு அம்மாவாய்............!!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...