Wednesday, September 21, 2016

என்னநாஞ்சொல்லுறது ?! 5

ஒண்ணொண்ணா நெனப்புவச்சு
ஒழுங்காக வரிசவச்சு
பென்னால எழுதிவச்சு (பேனா)
பெருமையாப் பாத்துக்கிட்ட
பொன்னான காலம்போச்சு!
பொறுமையெல்லாம் போயிருச்சு!

பின்னால குத்திவச்ச
பேப்பருக்கு வேலையெல்லாம்
வெகுவாக கொறஞ்சுபோச்சு!
கண்ணால பாத்ததெல்லாம்
கணிணினியில முடக்கியாச்சு!
கண்ணுவலிக்கி எக்சர்சைசு!
கையிவலிக்கி எக்சர்சைசு!
முதுகுவலி வந்துருச்சு!
மொழங்காலு வலியுங் கூட
முணுமுணுன்னு வந்துருச்சு
மொத்தமா போட்டுருச்சு!

என்னடா வாழ்க்கையிது!
எல்லாத்துக்கும் எக்சர்சைசு!
எழுந்தஒடன காலையில
ஒழுங்காக நடக்கறதுக்கு

காலையில ஏந்திரிச்சு
வாசக்கூட்டிக் கோலம்போடு!
கையால பாக்கறவேலய
கனஜோராப் பாத்துப்போடு

ஐய்யாநீ ஏந்திரிச்சு
பாலு,காய வாங்கநட!
பழவகைய ஒருவேள
பக்குவமா உணவாக
எல்லாரும் எடுத்துக்கங்க!
நல்லதெல்லாம் உங்களுக்கே!!

என்ன நாஞ்சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

1 comment:

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... ஆஹா....
அற்புதம் அம்மா...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...