Sunday, March 2, 2014

இரங்கலையோ?


ஆறுமுகன் சன்னதிமுன்
அன்னதானம் செய்யவும்
அறிவுப்பசிக் கென்று
கல்விதானம் செய்யவும் [வேதபாடசாலை]
சந்தானம் பெருகவென்று
சந்தான கோபாலர்வைத்து
அன்றாடம் பூசைசெய்ய
அந்தணரும் தான்வைத்து
அதற்குமொரு பங்குவைத்தார்!
இத்தனையும் செய்தாலும்
இரண்டுபிள்ளை கூட்டிவைத்தார்!
அத்தனின் மகனுக்கு
அருள்மனம் அருள்மனம் இரங்கலையோ?!
பிள்ளை பெறுவதற்கு
பெருந்தவங்கள் செய்யெவைத்து
புள்ளியெலாம் பெருகுதற்கு
பிள்ளையெனப் பிறக்கவைத்தாய்!
இத்தனையும் செய்தவர்க்கு
இளங்குமரன் இரங்கலையோ?
மகனாய் இருந்தவனை
‘மா’ புள்ளி ஆக்காமல்
மற்றவர்க்குத் தானவனை
மாப்பிள்ளை ஆக்குவையோ?

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

வாழ்த்துக்கள்...

Unknown said...

Arumaiyahachonneerhal.........

Unknown said...

Arumaiyahachonneerhal.........

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...