Friday, June 24, 2011

அன்பே சிவம்

வரவுசெலவு தெரியாத
வாழ்வின் வசந்தங்கள்

வருங்காலம் அறியாது
வயிற்றுப் பசிக்குமட்டும்

வயிறுதட்டிக் கையேந்தி......
வகைதெரியா அலங்கோலம்

வயிறு நிறைந்துவிட்டால்...
வந்துதிக்கும் குதூகலம்!

வாங்காத சீட்டுக்கு
வழியில் இறக்கிவிடும்வரை

உல்லாசமான ஊர்ப்பயணம்
புகைவண்டியில் தொடரும்பயணம்

இரவுப்பசிக்கு ஈன்றபிஞ்சுகள்
இறக்கைமுளைக்காத இளம் குஞ்சுகள்

இவர்களைப்போல இன்னும்
எத்தனை பிஞ்சுகளோ?!

அத்தனை குஞ்சுகளும்
ஆனந்தக் கூடடைய

இறவனை வணங்கிநாம்
இணைந்து வேண்டுவோம்

அன்பே சிவம்
சிவானந்த மயம்

சிவாயநம. சிவாயநம.
நமச்சிவாய.


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

அன்பே சிவம்
சிவானந்த மயம்

சிவாயநம. சிவாயநம.
நமச்சிவாய.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
அனுபவங்கள் பேசுகின்றன.
வாழ்த்துக்கள் அம்மா.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com///

வலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்து பார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...