Friday, June 10, 2011

கோவிலிலே சிலை நிறுவல்.

மறுநாள் காலையிலே
மக்களெல்லாம் ஒன்றுகூடி
புரவிப் பொட்டல்வந்து

குடைபிடித்துக் கொடிபிடித்து
கொம்பூதிக் குலவையிட்டு




கொட்டு முழங்க
அதிர்வேட்டு வான்பிளக்க

மறுபடியும் தோள்களிலே
மகிழ்வோடு ஏற்றிவந்து















கோவிலுக்கு உள்ளே
கோலாகலமாய் நிறுத்தி















ஆளுயர மாலைகளும்
அற்புதமாய்ப் பட்டுகளும்

அன்புடனே அணிவித்து
ஆவலுடன் பார்த்திருந்தார்

ஊர்விருந்து வைத்து
உளமகிழ வீடுவந்தார்

வெட்டிய மின்னலுடன்
கொட்டிய மழையோ!
கோடிக்குக் கோடிபெறும்!!

ஒருவாரம் முடிந்தபின்னே
திருவிழாவும் முடிந்ததென

மாலை கழட்டுதலும்
மக்களுக்குப் பாராட்டும்!




  
இப்பிறவி எடுத்தபயன்
இனியவிழா கண்டோம்நாம்

எப்பிறவி எடுத்தாலும்
அப்போதும் துணையிருந்து

ஆதீனமிளகி ஐயன்
சோதியாய் வழிகாட்டிடுவீர்









4 comments:

asksukumar said...

அருமை அம்மா!!!

muthu said...

Theanmathura tamiloasai,
paa malara varugaiilae,
parriluloor magillinthathai paoll,
nanum magillinthithain.
ATHAI UNGAL KAVITHAIGALLAI,
VIDATHU VASIKUM,
UNGAL ANNANMAGAL,
UNGAL PEYYAR KANDAVALL.---


,

muthu said...

Thean mathura thamiloosai,
paa malara varugailai,
parriluloor magilthalai paoll,
nanum magillthitain,
ATHAI UNGAL KAVITHAIKALLAI,
AIPPOTHUM VASIKUM,
UNGAL ANNAN MAGAL,
UNGAL PEYYAR KONDAVAL.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...