Wednesday, December 1, 2010

எங்கள் அப்பச்சி எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர்கள்..

மடைதிறந்த வெள்ளமென மக்களுக்கு அருள்பொழிந்து
கடைக்கண்ணால் கொப்பாத்தாள் கருணையுடன் காத்திருக்க
அடைக்கலமாய் வந்தவர்கள் ஆயிரமாய்ப் புகழ்சேர்க்க
தடக்கலன்கள் விலகிவளர் தண்காரை நகர்தன்னில்
குன்றக்குடி உறைகின்ற குமரனவன் சன்னதிமுன்
நன்றெனவே அந்தணர்கள் நாடிவந்து கற்பதற்கு
வேதங்கள் நன்கறிந்த வித்தகரும் தான்வைத்து
வேதசாலை அமைத்தஎங்கள் வேகுப்பட்டி யார்வீட்டில்
எல்லையில்லாக் குறும்புசெய்யும் எழிற்குழந்தை வேண்டுமென்று
வள்ளியம்மை அப்பத்தாள் வரம்வேண்டிச் சென்றார்கள்.
மெய்யம்மை அப்பத்தாள் மிகவிருப்பம் தான்கொண்டு
செய்கின்ற தவமெல்லாம் செம்மையுடன் மேற்கொண்டார்.
மெய்வருத்தித் தவமிருந்து மேன்மைமிகு மகன்தந்து
ஐயனவன் முருகனடி அடைக்கலமாய்ச் சென்றுவிட்டார்.
கைகளிலே குழந்தைதனைக் கருத்துடனே வளர்ப்பதற்கு
பெய்கின்ற மழையெனவே பேரன்பு செய்குதற்கு
ஐயாவாம் சுப்பையா அருமைவிசா லாட்சிதனை
மெய்யான துணையாக மேன்மையுறப் பெற்றார்கள்!
அப்பத்தாள் வளர்ப்பினிலே அப்பச்சி வள்ளியப்பர்
தப்பாது தான்வளர்ந்தார் தகைசால் மகனாக
                                                            வளரும்....

ஆங்கில ஆண்டு எட்டு மூன்று ஆயிரத்துத்தொள்ளாயிரத்து
தொண்ணூற்று மூன்றாம் ஆண்டுஎங்கள் அப்பச்சியின்
ஆயிரம்பிறைகாண்விழாவிற்கு எழுதியது.

2 comments:

Chitra said...

அருமையாக இருக்கிறது, அம்மா.

Vedachalamalagappan@yahoo.com said...

அருமை அயித்தியாண்டி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...